ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இவர் நீண்ட வருடங்களாக திருமணம் செய்துக்கொள்ளாமல் காலத்தை கடத்தி வருகின்றார்.
மேலும் தன் நண்பன் விஷால் திருமணத்திற்கு பிறகே தன் திருமணம் என்றார், விஷாலோ நடிகர் சங்க கட்டிட்டத்தை கட்டினாலே திருமணம் என்கின்றார்.
இப்படியிருக்க ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்த கிளம்பிவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் கலந்துக்கொள்ள இதில் ஆர்யாவை இம்ரஸ் செய்யும் பெண்ணையே அவர் திருமணம் செய்துக்கொள்வார் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் சினிமா தணிக்கை வாரிய தலைவர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் ஆகியோர்க்கு நோட்டிஸ் அனுப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
இதன் மூலம் இந்த நிகழ்ச்சி எப்போது இனி ஒளிப்பாராகுமா, ஆகாதா என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.